தமிழ் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணங்கள், நினைவு அலைகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பிறருக்கு எடுத்துரைக்கப் பயன்படும் கருவியே மொழியாகும். அம்மொழி பேசும் மக்களின் முடிந்த கொள்கைகளையும் முதிர்ந்த குறிக்கோள்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது இலக்கியமாகும். "அறிவே இலக்கியத்தின் அடிப்படை; கற்பனையே அதன் துணை; உண்மையே உள்ளீடு; இன்பமே அதன் விளைவு" என்கிறார் அறிஞர் ஜான்சன். இத்தகைய இயல்புகளை உடையதாகவே தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் பிறமொழியாரின் தாக்குறவும் பிறமொழி இலக்கியத்தின் தாக்குறவும் குறைவாக இருந்ததால் அங்கங்கே வழங்கி வந்த நாட்டுப் பாடல்களிலிருந்தே புலவர்களின் பாடல்கள் அமைக்கப்பட்டுத் தோன்றின. தமிழிலக்கியம் தொடங்கிய காலத்தில் அகவல், கலிப்பா, பரிபாடல் போன்ற செய்யுள் வகைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. பல்லவர் ஆட்சிக்காலத்தில் தமிழ், வடமொழி ஆகிய மொழிகளுக்கும் அவற்றைச் சார்ந்த கலைகளுக்கும் ஆதரவு கிடைத்து வந்தது. வடமொழிப் புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்நிலையில் தமிழ், வடமொழிச் சொற்கள் கலந்த
இந்த வலைப்பதில்(blog) தமிழ் மொழியின் வரலாறு, சிறப்பு, பெருமைகள் மற்றும் தமிழ் மொழியில் உள்ள இலக்கண இலக்கியங்கள் பற்றியும் தமிழ் புலவர்கள் அவர்களின் வாழ்க்கை பற்றியும் தமிழில் உள்ள நூல்கள் பற்றியும் விரிவான தகவல்களை அளிக்கிறோம்.
Comments
Post a Comment