Skip to main content

Get Direction

Comments

Popular Posts

தமிழ் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும்

  தமிழ் இலக்கிய வரலாற்றின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணங்கள், நினைவு அலைகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பிறருக்கு எடுத்துரைக்கப் பயன்படும் கருவியே மொழியாகும். அம்மொழி பேசும் மக்களின் முடிந்த கொள்கைகளையும் முதிர்ந்த குறிக்கோள்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது இலக்கியமாகும். "அறிவே இலக்கியத்தின் அடிப்படை; கற்பனையே அதன் துணை; உண்மையே உள்ளீடு; இன்பமே அதன் விளைவு" என்கிறார் அறிஞர் ஜான்சன். இத்தகைய இயல்புகளை உடையதாகவே தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் பிறமொழியாரின் தாக்குறவும் பிறமொழி இலக்கியத்தின் தாக்குறவும் குறைவாக இருந்ததால் அங்கங்கே வழங்கி வந்த நாட்டுப் பாடல்களிலிருந்தே புலவர்களின் பாடல்கள் அமைக்கப்பட்டுத் தோன்றின. தமிழிலக்கியம் தொடங்கிய காலத்தில் அகவல், கலிப்பா, பரிபாடல் போன்ற செய்யுள் வகைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. பல்லவர் ஆட்சிக்காலத்தில் தமிழ், வடமொழி ஆகிய மொழிகளுக்கும் அவற்றைச் சார்ந்த கலைகளுக்கும் ஆதரவு கிடைத்து வந்தது. வடமொழிப் புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்நிலையில் தமிழ், வடமொழிச் சொற்கள் கலந்த

தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும்

தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும் மொழி மக்களது உள்ளுணர்விலிருந்து தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு கலையாகும். போலச் செய்தல் (Imitation )ஒப்புமையாக்கம் (Anology) என்பன மொழியின் வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெறுகின்றன.  இவ்வுலகின்கண் ஆறாயிரத்தைந்நூறுக்கும் மேற்பட் மொழிகள் இருப்பதாக மொழியியலார் கருதுகின்றனர். இவற்றுள் எழுத்துக்கள் உள்ள மொழிகள் 700க்கு உட்பட்டவை. தொடர்பு, அமைப்பு, பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில்மொழிகளைப் பல மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவற்றுள் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று. இந்திய நில அமைப்பில் விந்திய மலைக்குத் தெற்கே உள் பகுதிகளில் பேசப்பெற்ற மொழிகள் திராவிட மொழிகளாகும். 'தமிழ்' என்னும் சொல்லிலிருந்து தான் 'திராவிடர்' என்ற சொல் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தமிழ்-> தமிழா-> தமிலா->ட்ரமிலா-> ட்ரமிடா->த்ராவிடா-> திராவிட இலக்கண, இலக்கியம் கொண்ட மொழிகளைத் திருந்தியமொழிகள் என்றும் இவை இல்லாத மொழிகளைத் திருந்தா மொழிகள்  என்றும் கால்டுவெல் பாகுபடுத்தியுள்ளார். திருந்திய மொழிகளுள் தமிழ் வளமான இலக